அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

வண்டிக்காரன் மகன்

ஓயாமல் உழைக்கின்றாய்!
உன் மகனை ஆளாக்க
ஊர் மெச்சும் வாழ்வுதர
உருக்குலைய உழைக் கின்றாய்!
பேர்சொல்லி மகன் வாழ்வான்
பெருமை மிகும் என்றெண்ணிப்
பேய் மகனும் உனைமறந்தால்
நாய் மகனே ஆவான் காண்!

(காஞ்சி ஆண்டு மலர் - 1966)