சிறைக் கூடத்திலே
- அவர்
செய்வ தென்ன வென்று
தெரியாமல் வாடுகிறார்!
(சிறைக்)
பாழும் மனம் என்னமோ,
பாகாய் உருகுது பலப்பல
நினைக்குது,
ஓயாது ஓயலமிட்டும் - நான்
ஓங்காரங் கூவியும் ஒரு
பலனும் இல்லை.
(சிறைக்)
கதவுந் திறக்கக் காணோம்
- இந்தக்
கஷ்டத்தை எண்ணினால்
கலந்தண்ணீர் வருகுதே.
கண்கள் சிவந்திடுதே - என்
காலமும் வீணாகப் போகுதே
ஐயையோ!
(சிறைக்)
அடுப்பிலிட்ட கட்டைபோல்
- அவர் அனைவரும் தேய்வதா
அணைத்திட வேண்டாமா.
அண்டை அயலார்களே! - நீங்கள்
ஆவன செய்திடத்
தேவைதான் இல்லையா
(சிறைக்)
(ஆகஸ்டுப் போரில் காங்கிரசார் சிறையில்
துன்புறக்கண்டு ராஜாஜி வருந்துவதாக, அவருக்குக் கூறும்
அண்ணா தம் "தேயிலைத் தோட்டத்திலே" கட்டுரையில்
இப்பாடலைப் புனைந்துள்ளார். )
(திராவிடநாடு - 05.09.1943)