என்ன செய்வது நண்பரே! நாம்
இனி ஏது செய்வது, தோழரே!
தேர்தலும் தோற்றது, தேகமும் இளைத்தது.
தேடிய பொருளே நம்மைகூட மறுத்தது.
ஓடியே வெளியிட்டார் ஓலமாம் அறிக்கையை
நாடியே வந்ததம்மை நட்டாற்றில் கைவிட்டார்.
கட்சிக்குத் தலைவன் நான் கனதனவான்களே!
காண்கிறேன் முகங்களைச் சோகமே தாங்கிட
ஏங்குதே என்மனம், தூங்குதே உள்ளமும்,
பாங்குடன் கூறுவீர், பலன்உண்டோ இனியுமே!
தமிழ்
இசை - 2
நாடோ நமைஅறிய ஏடோ ஒன்றுமே இல்லை.
பாடுபடுவதற்கே பண்பினர் யாரும் இல்லை.
ஏனோ எனக்குத் தொல்லை, நீக்குவீர் இச்சிக்கலை.
தேனோ தோல்வித்தொல்லை, நானோ அதற்குச்சள்ளை!
வரும் தேர்தல் தன்னிலே வகையுடன் நில்லாவிடில்
வானம் இடித்திடாது, வாழ்வும் வறண்டிடாது.
வருமுன் உணர்ந்தேன் உண்மை, தெரிமின் இதுநன்மை
வகை உண்டெனின் சொல்மின், வாய்திறந்து பேசுமின்!
ஊரெங்கும் செல்லுக! உட்பகை
வெல்லுக!
உற்றதுணை யெனவே ஒரு ஏடு தேடுக!
நற்றவம் துணைசெய்யும், நாதன்முன் நிற்பானே
நம்பினோம் வேலனை, நாம் வெல்வோம், ஏகியே!