அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

கடவுள் எங்கே?

வீண்மீது கடவுள் உளர்.
என்றே விளம்புகின்றாரா சிலர்?
இல்லை! இல்லை! கடவுளர் ஆங்கிலை!

மூடமதியினர் மூடமதிக் கதைக்கூறி
முடமாக்க முனைகின்றார், இசையாதீர்!
காரணம் காட்டுவேன் கருத்தில்
கொண்டு உண்மை காண்பீர்!

கொலையோடு கொள்ளை சூது
சூழ்ச்சிகள் செய்திடும் மன்னர்
திருநகர் பலவும் தீ்க்கிரையாக்குவர்,
இச்செயல் புரிந்திடும் இவரெல்லாம்.
சாந்தசீலர் தமைவிட இன்பமாய்
வாழ்கின்றார்!

கடவுளை நம்பிடும் சிறநாடு பல
கடவுள்நெறி இகழும் பேரரசுக்குப்
பலியாயின!
படைபலம் கொண்டவன்
அடிமை கொள்கிறான்!

(காஞ்சி ஆண்டு மலர் - 1965)


(கி.மு. 480-ல் கிரேக்க நாட்டிலிருந்த யூரிமிடிஸ் எனும் கவிஞர் பெருமகன் கடவுளர் உளரா? விண்மீதா? என்று கேட்டுக் கேலி செய்தார். கவிதை புனைத்தளித்தார்.

கடவுளையே மடக்கிக் கேள்வி கேட்டிடும் துணிவினை மக்கள் பெற்றுவிட்டால், கொடுங்கோலர்களை எதிர்த்து விரட்டிடும் துணிவு எளிதாகப் பெற்றிடுவர் என்கிறார்.)