அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


“இன்பத் திராவிடமே என் இலட்சியம்!”
“கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தியடயும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனையைக் கொடுக்க முடியுமோ அவைகளையும் பழிவாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்தவகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடக்தை முடித்துவிடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு நியாயமான லட்சியத்தை அடைய வேண்டுமனாம் அதற்காகக் கஷ்ஙட நஷ்டங்களடைதல் என்னும் விலைகொடுக்க வேண்டுமாதலால் அவ்வாறு வேண்டிக் கொள்கிறேன்.

காளையல்ல, பேசினது, கிழவர்! எனவேதான், காளைகள் ஆயிரமாயிரம், அவருடைய குரல்கேட்டுக் குதூகலிக்கின்றன.

ஒரு மாலை - மூன்றரை மணி இருக்கும் - முகத்தில் உ இடாது உட்கார்ந்திருக்கிறார். மாஜிஸ்ட்ரேட், பசி தெரியாமல், பார்த்த கண்களை நீக்க முடியாமல் தமிழர்கள், குடும்பங் குடும்பமாக உள்ளனர் கோர்ட்டுக்கு, உள்ளேயும் வெளியேயும், சட்டம், ஒருபுறம் - சமர் மற்றோர்புறம் ஆச்சாரியார் ஓர் புறம் - பெரியார் இராமசாமி ஓர்புறம் - கட்டாய இந்தி முறைத்துப் பார்க்கிறது, கன்னித் தமிழ் எழிலுடன் எதிர்நோக்குச் செலுத்துகிறது. தண்டனை தரும் அதிகாரம் அவர்கட்கு, தமிழைக் காக்கும் உரிமையைத் தாங்கிக் கொண்டிருக்கிறார் பெரியார். நடப்பது காங்கிரசாட்சி சம்பவமோ, சிறைக்கு, மக்கட் தலைவனை அனுப்புவதாக இருந்தது. பெரியார் பேசினார், விடுதலை வீரர்களின் மொழியிலே, விலை கொடுப்பேன், உரிமைக்காக என்றார். எடு சட்டத்தை, கொடு தண்டனை, முடி இந்த நாடகத்தை என்று முழக்கமிட்டார். வயது என்ன? அறுபதாம் கலியாணப்பருவம்! பேச்சிலேயோ, தீ போக்கோ, முறுக்கேறின படைத்தலைவருடையது! ஏன்? தமிழகம், அவர் பக்கம் நின்றது.

மாஜிஸ்ட்ரேட் என்ன சொல்லப் போகிறார்? எமது தலைவரின் நிலை என்ன ஆகும்? கூண்டிலே சிங்கம்! கும்பலாகத் தமிழர் நின்று பார்க்கின்றனர்! அரியணை மீதோ ஆச்சாரியார், என்று வருந்தினர் மக்கள் வாய்திறந்தார் மாஜிஸ்ட்ரேட்.

இரண்டாண்டுகளா? எமது தலைவருக்கா? இந்தி வேண்டாம் என்பதற்கா! இரும்பிலே இருதயம் செய்து அமைத்துக் கொண்டனரோ ஆட்சியாளர்கள். கரும்பினும் இனிக்கும் எமது தமிழைக் காத்திடக் கிளம்பினதற்கா, இத்துணைக் கடுந்தண்டனை என்று எண்ணித் திகைத்தனர் தமிழர் திகைப்புண்ட தமிழரின் செவியில், மாஜிஸ்ட்ரேட் மேலும் சில சொல் கூறியது வீழ்ந்தது.

2 வருஷம் தண்டனை, அத்துடன் அபாரதம் 2000 ரூபாய் - கட்டத் தவறினால் மேற்கொண்டு ஒரு வருஷம்.

1938ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 6-ந் தேதி மாலை 3-25க்கு தலைவர் பெரியாருக்கு 3 வருடத் தண்டனை விதிக்கப்பட்டது - வெடி குண்டு வீசியதற்கு அல்ல, தமிழ் வேண்டும் தமிழருக்கு - இந்தியைக் கட்டாய பாடமாக்கக் கூடாது என்று சொன்னதற்கு.

திகைத்த தமிழரை, ஒரு முறை நோக்கினார், திக்விஜயம் செய்யும் மாவீரன் முறையில், கண்ணீர் திவலைகளைக் கண்டார். சால்வûயை இழுத்துப் போட்டுக் கொண்டார், ஒரு புன்சிரிப்புடன் பேசினார் பக்கம் சென்றவரிடம் நான் இப்போது ஓர் கைதி என்று.

ஆம்! தமிழர் தலைவரக் கைதி கோலத்திலே கண்டனர் அன்று. அவருக்கு அது எட்டாவது முறை தமிழர், அந்தக் கைதிக்காகக் கண்ணீர் விட்டனர். குழந்தைகள் முதியவர் போலாயினர், முதியவர் குழந்தைகளெனக் கோவெனக் கதறினர்.

பெரியார் இராமசாமி 5544ம் நம்பர் கைதியானார், சென்னைச் சிறை புகுந்தார். வெளியே தமிழர் தம் தலைவனுக்காக உருகினர், சிறையோ புதிய கௌரவம் பெற்றது, செந்தமிழ் நாட்டுச் சிங்கம் - எங்கள் உ.வெ.ரா தங்கம் வந்தார் - வந்தார் என்று சிறையிலே கீதம் கிளம்பிற்று. ஆம்! சிறைக்கு வெளியே மட்டுமா, உள்ளேயும் இருந்தது, பெரியார் பெரும்படை!

வழக்கு மன்றத்திலே, அவர் ஆற்றிய வீரஉரை, அவர் வாழ்க்கையின் திறவுகோல் எதுவென்பதைக் காட்டுவதாகும்.

லட்சியத்தை அடைய கஷ்ட நஷ்டம் அடைதல் எனும் விலை கொடுத்தாக வேண்டும் - என்றார். ஆம் கொடுத்திருக்கிறார் ஓட்டுமுறை சிறை சென்றது மட்டுமல்ல, விலை.

எந்த மக்களின் சார்பாகப் பேசுகிறாரோ, எந்தத் தமிழ் இனத்துக்காகத் தளராது உழைக்கிறாரோ, அதே ஈன மக்களின் கேலி கண்டனம் சந்தேகப் பார்வை இழிமொழி இவைகளைப் பல்லாண்டுகளாகப் பெற்று இருக்கிறார் - ஆனால் பாதையிலிருந்து வழுவியதில்லை.

விலை கொடுத்தார் ஓர் சிறந்த இலட்சியத்துக்காக என்ன அந்த இலட்சியம் அதனைத் தமிழர் அறிதல் வேண்டும், அவருடைய விழா கொண்டாடப்படும இந்நாள் அவரே பேசுகிறார், கேளுங்கள், அவருடைய இலட்சியம் என்னவென்று தெரியும் - அது உங்கள் இலட்சியம் என்பதை உணருவீர்கள்.

திராவிடர்களின், தமிழர்களின் நிலைமையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், முதலாவது திராவிடநாடு தனி நாடு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

திராவிட நாட்டின் எல்லைகளைக் குறிப்பது கஷ்டமில்லை. இயற்கை திராவிட நாட்டைச் சுற்றி மூன்று பக்கங்களில் சமுத்திரத்தையும் ஒருபுறம் விந்திய மலையையும் அமைத்து வைத்திருக்கிறது.

திராவிட நாடு, தெளிவாக ஒரு தனிப்பட்ட சமூகத்தையுடையது, திராவிட மொழியான தமிழ்மொழி எத்தனை பிரிவாய்ப் பிரிந்திருந்தும், ஆரியரோடு சம்பந்தப்படாமல் ஒருதனிப்பட்ட இனமாக இருப்பதற்குத் தமிழ் மொழியின் தன்மைக்கு நான் வந்தனம் செலுத்துகிறேன்.

திராவிட நாடு தன்னுடைய சுதந்திரத்தை விடடுக் கொடுக்க மறுப்பதே தொன்றுதொட்டு வடநாட்டிற்கும் திராவிட நாட்டிற்கும் நடந்த சண்டைக்குக் காரணம்.

சூதாட்டத்தில் காய்களை உருட்டுவதுபோல் சில மனிதர்களை உருட்டிவிட்டு திராவிட நாட்டுப் பிரிவினையை அடையமுடியாது. திராவிட இனத்திலுள்ள ஒவ்வொருவனும் விடுதலை பெறவேண்டுமென்று முழுமனதுடன் தீர்மானித்தலே திராவிடநாடு இலகுவில் பெற முடியும்.

ஒருவனுடைய நாட்டில் வேறு ஒருவன் வந்து ஆதிக்கம் செய்யும்படியாகவும் நாட்டுக்குடையவனைச் சூத்திரமனாகவும் கீழ் ஜாதியாகவும் செய்திருக்கும், செய்து வரும் ஆட்சி, எப்படிப்பட்டதானாலும் அது கொடுங்கோன்மை ஆட்சியேயாகும்.

இன்று நமக்குத் திராவிடர் என்கின்ற பெயரே இல்லை. தமிழர் என்கிற பெயரே இல்லை. சூத்திரர், தீண்டப்படாதவர், நாலாம் ஜாதி, ஐந்தாம் ஜாதி என்கிற பெயர்கள்தான் இருக்கின்றன. இதுசரியா? இது உங்களுக்குச் சம்மதமா? இதுமாற்றப்பட வேண்டாமா? அதற்காவன செய்ய வேண்டாமா?
இதைச் செய்வதைவிடவா, மந்திரிப் பதவி, வைசிராய் மெம்பர் பதவி, இலோசனையாளர் பதவி, கவர்னர் பதவி ஆகியவை பெரிதும் அவசரமும் அவசியமுமானவை என்று கேட்கிறேன்.
முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே, இந்நாட்டு சமதர்மத்திற்கு முதல் படியாகும். அதனாலேயே, பொருளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு மருந்து என்று கருதியிருக்கும் நான் சமுதாயத்தில், வாழ்க்கையில், சமதர்மத்தை முக்கியமாய் வலியுறுத்தி வருகிறேன்.

நம்நாட்டில் இன்று ஜாதிபேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாய் இருக்கிறது.

சமூகத்தில் மேல்ஜாதி கீழ்ஜாதி அடிமை ஜாதி என்பவைகள் இருப்பதோடு, இண் பெண் தன்மைகளில் உயர்வு தாழ்வு இருந்து வருகிறது. இவைதவிர ஏழை பணக்காரன், முதலாளி, தொழிலாளி, தன்மையும் இருந்து வருகிறது. இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டதாகவும் சில முயற்சியால் செய்கையால் ஏற்பட்டதாகவும், இவ்வளவுக்கும் காரணம் மனிதன் அல்லவென்றும் சொல்லப்படுகிறது. இவற்றையே மேல் நிலையில் உள்ளவனும், கீழ்நிலையில் உள்ளவனும், நம்பிக் கொண்டிருக்கிறான். இந்த மூடநம்பிக்கைதான் வெகுகாலமாக மனித சமூகத்தில் எவ்வித மாறுதல்களும் ஏற்படுவதற்கில்லாமல் தடுத்துக் கொண்டு வருகிறது.

இந்த மாபெரும் சனியனான ஜாதிமத பேதத்தொல்லைகள் மனித சமூகத்தை விட்டுத் தொலைய வேண்டுமானால் மனிதனுக்கு விஞ்ஞான அறிவும் நாட்டில் விஞ்ஞான வளர்ச்சியும் தேவை.

கஷ்டமானதும் இழிவானதும் இனவேலை செய்பவர்கள் எல்லாம் கீழ் ஜாதியாகவும், சுகமாகவும் மேன்மையாகவும் உள்ள வேலை செய்பவர்கள் மேல் ஜாதியாகவும், ஒரு வேலையும் செய்யாமல் ஊரார் உழைப்பில் வயிறு வளர்த்துக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வஞ்சித்துக் திரிகிறவர்கள் மகாமகா மேல்ஜாதியாகவும் ஏற்பட்டதற்குக் காரணம் விஞ்ஞான அறிவில்லாததே.

மேனாட்டிலே ஈம்மாதிரியான தொல்லை அனேகமாகத் தீர்ந்து விட்டது.

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக சமத்துவம் அந்தச் சமூகத்திலே உண்டாக மார்க்கம் ஏற்பட்டுவிட்டது. நாம் என்ன கூறினாலும் இனிமேல் நமது பின்சந்ததியார் பழைய தொழில்முறை, ஜாதிமுறைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது உறுதி.

எனக்குத் தொழிலாளர்களிடம் உண்மையில் அன்பும் பக்தியும் கவலையும் வேறெதையும் விட அதிகம் என்பதை உண்மைத் தொழிலாளர்கள் 15, 16 வருடமாகத் தொழிலாளருடன் பழகுபவர் அறிவர்.

காதினிக்கப் பேசுபவர்களைக் கண்டு தொழிலாளர் மயங்குவது அறிந்து பெரிதும் வருந்திúன்ன 15 ஆண்டுகட்கு முன்பு நாகையில், ரயில்வே வேலைநிறுத்தம் நடந்தபோது அதிலே கலந்த கொண்டு பாடுபட்டு, அதற்காக நான் சிறை சென்றதை அக்காலத் தலைவர்கள் உணர்வார்கள்.

தொழிலாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை - பார்ப்பனரல்லாதாரின் விடுதலையாகும்.

ஒருகாலத்தில் இங்கிலாந்தில் அன்னிய நாட்டுத் துணி கட்டினால் 30 பவுன் அபராதம் விதிக்கச் சட்டம் இயற்றினார்களாம். அவர்களுடைய நெசுவத் தொழிலை விருத்தி செய்ய இச்சட்டத்தை ஏற்படுத்தி இருந்தனர். இன்று நம்மில் 100க்கு 60, 70பேர் ஆமதாபாத் போன்ற வெளி மாகாணத் துணிகளை அணிந்திருப்பதைப் பார்க்கிறோம். பெண்களும் ஆமதாபாத் சீலைகளைக் கட்டுகிறார்கள்.

ஆமதாபாத் முதலிய வெளிநாடடு, அதாவது திராவிட நாடு அல்லாத நாட்டுத்துணிகளை நாம் தடுத்துவிட்டால் நமது கைத்தொழில் வளர்ச்சி அடையும் கைத்தறி நெசவாளர்களின் துன்பம், வறுமை, கஷ்டம் ஒழிந்து போய்விடும்.

எந்த மனிதனும் மற்றொரு மனிதனுக்கு உபகாரியாகவும் கடைசீபட்சமாக, தன்னால் மற்றவனுக்குத் துன்பம் தராதவனாகவும் இருப்பதே பெரிய ஒழுக்கம், மதம் என்று சுயமரியாதை இயக்கத்தார் கருதி இருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் ஒழுக்கத்தை பற்றி ரஷ்ய புரட்சி வீரர் லெனின் பொதுவுடைமைச் சிறுவர்கள் கூட்டத்தில் பேசிய பேச்சை உங்களுக்கு எடுத்துச் சொல்ல இசைப்படுகிறேன்.

அதாவது பொதுவுடைமைக்காரர்களுக்கு ஒழுக்கம் இல்லை என்று நம் எதிரிகள் சொல்கிறார்கள். அது தவறு. நாம் தான் சமூகத்தின் உண்மையான ஒழுக்கங்களைக் கையாள்வதோடு மற்றவர்களையும் ஒழுக்கமாக நடவுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறோம். அதற்குப் பொதுவுடைமை ஒழுக்கம் என்று பெயர். நம்முடைய ஒழுக்கத்திற்கும் மதவாதிகள், பணக்காரர்கள், ஒழுக்கத்திற்கும் வித்யாசமுண்டு, அவர்களது ஒழுக்கங்கள் ஏழை மக்களளுடையவும் பாமர மக்களுடையவும் கண்களில் மண்ணைப்போட்டு பலன் அனுபவிப்பதற்கு ஆக ஏமாற்றச் செய்கிற சூழ்ச்சிகளாகும். நமது ஒழுக்கமெல்லாம் ஒருவனால் ஒருவன் ஏமாற்றப்படாமலும், ஒருவனாலொருவன் வருத்தப்படாமலும் இருகும்படியானவைகளாகும். பாட்டாளி, ஏழை மக்களுடைய நன்மையையே பிரதானமாகக் கருதுவதுதான் நமது ஒழுக்கம் என்று லெனின் சொன்னார். சுயமரியாதைக்காரர்களாகிய நாமும் தனிப்பட்ட எந்த வகுப்பாருடையவும் சுயநலத்துக்கு மாத்திரம் பயன்படும் எந்த ஒழுக்கத்தையும் தனிப்பட்ட மதாவதிகளுக்கு மட்டும் பயன்படும் எந்த ஒழுக்கத்தையும் ஒப்புக் கொள்ளாமல், எல்லா மக்களுக்கும் எந்த வகுப்பாரானாலும் எந்த நிலையிலுள்ளவர் களாலும், எந்த மதக்காரரானாலும் யாவருக்கும் ஒன்றுபோல் பயன்படும்படியான காரியங்களையே நாம் ஒழுக்கம் என்கிறோம். இதனால் சுயநலத்தையே பிரதானமாய்க் கருதிக் கற்பித்துக் கொண்ட ஒழுக்கங்களை உடைத்தெறிவது சுயமரியாதைக் காரர்கள் கடமை என்பது விளங்கும்.

வயது சென்ற பெரியார்கள், மானமற்ற செல்வப் பித்தர்கள், பதவிப் பித்தர்கள் நிலை எப்படியோ இருக்கட்டடும். வாலிபர்களாகிய நீங்கள் உறுதியுடனும் துணிவுடனும் நம்பிக்கையுடனும் முன் வாருங்கள் ஒரு பத்து வருடத்திற்குள் பெரியùதோரு சமுதாயப் புரட்சி நடத்தி மானமும் விடுதலையும் பெற்று விடலாம்.

நான் ஒரு எதிர் நீச்சுக்காரன் என்ன காரணத்தாலோ நம் நாட்டு மக்களின் பெரும்பான்மையான அபிப்பிராயத்துக்கு நான் மாறுபட்டவனாக இருந்து வருகிறேன். பழைமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாய் காணப்படுகிறது, நானோ பழைமைப் பித்தை வெறுக்கிறவனாயிருக்கிறேன். அதனா லேயே நான் வெகுபேர்களால் வெறுக்கப்படுகிறேன். இனாலும் அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பி விடுவார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை! அறிஞர் உலகு இன்று அவர் ஊரையை மறுப்பதில்லை! வீரர் உலகு அவர் செயலைப் பாராட்டவோ துணை செய்யவோ தயங்கவில்லை. வாலிப உலகு சமஉரிமைப் போர்ப்படையை அமைக்கத் தவறிவில்லை. வீணர் என்ன கருதிடினும், அவருடைய நம்பிக்கை வீண்போக வில்லை என்பது தெளிவாகக் காட்டும் பல அறிகுறிகள் தோன்றிவிட்டன.

அவர் எதிர் நீச்சுக்காரர்தான்! ஆனால், அதிலே அவர், வெற்றி பெற்றுவிட்டார்.

மகாபாபி! புராதன கால ஏற்பாட்டைக் குறை கூறுகிறானே! வாய்ப்புழுக்காதோ! ரௌரவாதி நரகமன்றோ கிடைக்கும்.

கர்ஜிக்கட்டும், கண்டிக்கட்டும்! கவலையே வேண்டாம், எத்தனையோபேர், இதுபோல் முன்பெல்லாம் கத்தினர். கண்டது என்ன? அபஜெயம் அதேதான் இவனுக்கும் என்னதான் அசகாய சூரனாக இருக்கட்டும், நமது பழையகால ஏற்பாட்டோடு மோதிக் கொண்டால், அபஜெயம் நிச்சயமன்றோ!

ஏன் இந்த வீண்வேலை! இப்போது பழையகால ஏற்பாடுகள், என்ன உள்ளன. லோகம் மாறிண்டிருக்கு. இ;சசார அனுஷ்டானாதிகள் காலவேகத்தாலே, அடியோடு மாறிவிட்டன. செத்த பாம்பை அடிக்கிற மாதிரி, எதற்காக இவர், ஜாதிகுலம் ஆச்சார் சாஸ்திரம்னு கண்டித்துக் கொண்டு இருக்கணும்? அனாவசியம்!

அவர் சொல்வது, உண்மை, நிச்சயமாகப் பேதம் ஒழிந்துபோகத்தான் வேணும். எல்லாரும் சகோதர பாவத்தோடு வாழத்தான் வேண்டும. அதுதான் சிலாக்கியம் இனா, அவசரப்படக் கூடாது. மெள்ள மெள்ள நடக்க வேண்டிய காரியம்.

யார் இப்போது, பலஜாதி பலகுலம் இருக்க வேணும்னு வாதாடுவா! அதெல்லாம் ஒழியத்தான் வேணும். அதற்காகத்தான் சுயராஜ்யம் வரவேணும்னு சொல்கிறா பெரியவா, அதுக்காத்தான் தற்சமயம் பாடுபட வேணும். சுயராஜ்யம் வந்தானதும் ஜாதிபேதம் முதலிய சனியன்களைத் தொலைக்கிற காரியந்தான் செய்தாக வேணும். நடக்காமலா போகும். நிச்சயமாக நடக்கும்.

சாபம், கோபம், கேலி, சமாதானம், சமரசம், என்று படிப்படியாகப் பழைமையின் காவலர், பேசியவந்த விதத்தை மேலே பொறித்திருக்கிறோம். இந்த மாறுதல், பெரியாரின் வெற்றி. அதற்கான விலையைக் கொடுத்து அந்த வெற்றியை அவர் பெற்றார்.

அவருடைய இலட்சிய பூமியில், இல்லாமை, போதாமை, அறியாமை, இருக்காது.

திராவிட நாடு திராவிடருக்கே!

என்ற ஒரு வாக்கியத்துக்குள் அடங்கி இருக்கும், கருத்துக்களை அவருடைய மொழியின் மூலம், ஓரளவு விளக்கி உள்ளோம். அந்த இலட்சிய பூமியை அடைய அவர், பட்ட, பட்டுவரும் பாடும் கொடுத்த விலையும் சாமான்யமல்ல.

துன்புறும் எளியோர் துயரது தீர்ந்து
இன்புறும் வண்ணம் உண்மை இயம்ப
அஞ்சுவோன், வீரன் இகான், மற்றும்
உற்ற துரைத்தலால் எறும் பழியும்
மற்றும் பல்லின்னல் வந்திடு மென்ற
மெய்மமையைக் காக்கும் விரதம் விடுத்து
பொய்யுரைப் போரைப் புவிதனி லென்றும்
அடிமை யென்றே அறைந்திடு வோமே.

அஞ்சாநெஞ்சுடன் அறிவுக்காகப் போராடும் ஆற்றல் மிக்க பெரியார் வாழ்க! என்று, இன்று தமிழகம் வாழ்த்துகிறது

(திராவிட நாடு - 29-9-46)